மடி சாப்பாடு

சமீபத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனின் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். அவன் பெற்றோரின் அறுபதாம் கல்யாணம். தடபுடலாக நடந்த விசேஷத்தில் Highlightஏ சாப்பாடு தான். நானும் எத்தனையோ இடங்களில் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் இதுபோல ஒரு மாறுபட்ட experience எங்கேயும் இருந்ததில்லை. அவர்கள் பிராமண குடும்பம் என்றதால் மடி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதென்னடா மடின்னு கேக்காதீங்க. பாரம்பரிய வழக்கமாம். கல்யாணம் முடிந்ததும் மளமளவென்று அதே ஹாலில் மக்கள் வரிசையில் கீழே உட்கார துவங்கினர். நானும் என் நண்பன் இன்னொருவனும் ஒரு ஓரத்தில் இடத்தை போட்டோம். ஏதோ அவனுக்கு இந்த சாப்பாடு பத்திய சூட்சுமம்லாம் தெரிந்திருந்ததால் நான் தப்பித்தேன். இல்லேன்னா விவரம் தெரியாம பாதியிலே எழுந்து வந்திருப்பேன்.

இலை போட்டதும் கையில் சிறிது தண்ணீரை ஊற்றிக்கொண்டான் நண்பன். சரி உள்ள தெளிச்சு இலையை கழுவப்போறான்னு பாத்தா, இலைக்கு வெளிய ஒரு மூணு round சுத்தி வாயில உரிந்தான். “பரிசேஷணம் டா” என்றான். Rightu என்றேன். வரிசையாக உணவு பரிமாறுபவர்கள் வருவது தூரத்தில் தெரிந்தது. ஒரே குஷி, செம்ம பசி. சரி மொதல்ல என்ன வைக்கறாங்கன்னு பாத்தா, உப்பு! அடேய் கொல பசில இருக்கேன்டா கூட்டு பொரியல் ஏதாவது வைங்கன்னு மனசுல நினைத்தது யாருக்கோ கேட்டாற்போல சட்டுன்னு ஒரு மூணு பேர் வந்தாங்க. தரையில இருந்து சுமார் 2 அடி உயரத்துல இருந்து பொரியலை கரண்டிகள் இன்றி கைகளால் Airdrop பண்ணாங்க. ஹப்பாடான்னு கை வைக்க போனேன். பட்டுன்னு கையில் தட்டினான் நண்பன். எல்லாம் போட்ட பிறகு தான் ஆரம்பிக்கணும், நடுவுல சாப்பிடாதே என்றான். என் நெலம தெரியாம பேசரடா என்றேன். மொத்த பேரும் கைகோர்த்து ‘ஆமேன்’ சொல்லிட்டு தான் சோத்துல கை வைக்க விடுவாங்களோ என்று நினைத்துக்கொண்டேன். நானும் ஒரு ஏழெட்டு நிமிடம் இலையை முறைத்துப் பார்க்க, இலை ஏகபோகமாக நிரம்பிக்கொண்டிருந்தது. என் பசி graph, Bell Curve இன் உச்சியை தொட்டு விட்டு பாதாளம் நோக்கி Fast ஆக பாய்ந்துக்கொண்டிருந்தது. இறுதியாக ஏகப்பட்ட சோற்றை தள்ளி அதில் ஒரு குழிக்கரண்டி நெய்யை ஊத்தினாங்க. தோளில் தட்டி “இப்ப சாப்பிடலாம்டா” என்றான் நண்பன். “இன்னும் எதுவும் ஊத்தலையே” என்றேன். நெய் சாதம் தான் Firstu என்றான்.

கொஞ்ச நேரத்துல சாம்பார் வாளி கண்ணுக்கு தென்பட்டது. இதுவாவது இருக்கேன்னு தெம்பாக சாப்பிட துவங்கினேன். சாம்பார்க்கு அப்பறம் ரசம் வரும் ன்னு காத்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரு surprise காத்துக்கொண்டிருந்தது. சப்பாத்தி மாதிரி ஒரு அயிட்டத்தை frisbee கணக்கில் ஒரு மாமா இலைக்கு இலை வீசிக்கொண்டு வந்தார். என் இலையில விழுந்தப்பொ தான் தெரிந்தது அது சப்பாத்தி இல்லை போளி ன்னு. சாம்பார்க்கு அப்பறம் போளியா, ஏன்டா என் flowவை கெடுக்கறீங்க ன்னு நினைத்துக்கொண்டே போளியை விழுங்க துவங்கினேன். “டேய் டேய் அத சாப்பிட்டியா?” என்று அவசரமாக கேட்டான் நண்பன். அய்யய்யோ அது சாப்பட்ற matter இல்லையா, கை தொடைக்கர்துக்கு குடுத்தாங்களா ன்னு நான் ஒரு நிமிஷம் பீதி ஆயிட்டேன். “நெய் ஒரு roundu வரும் டா, இரு” என்றான். மீதி இருந்த அறை inch போளியை ஆறு கரண்டி நெய்விட்டு அமுக்கியவுடன், காலி இலையில் சுமார் நூறு மில்லி பாலை அனாமத்தாக ஊத்தி விட்டு போனார் ஒருவர். “போலியை அதுல முக்கி சாப்பிட்டிருக்கனும் டா” என்று முறைத்துக்கொண்டே சொன்னான் நண்பன். அட போடா என்றேன். இதுக்கு நடுவில் தான் சுவாரசியமாக ஒரு விஷயம் நடந்தது.

இலைக்கு பத்து ருபாய் கைமாறுவது தெரிந்தது. ஆஹா இது சின்ன கவுண்டர்ல சுகன்யா போடற மொய்விருந்து மேட்டர்ல, நம்ம கிட்ட வேற பத்து பிசா இல்லையே என்று சட்டைப்பையை தடவிக்கொண்டிருந்தேன். அப்பறம் தான் தெரிந்தது எல்லாருக்கும் சாப்பாடும் போட்டு ஆளுக்கு பத்து ரூபாயும் தராங்கன்னு . நண்பனோட அப்பா அம்மா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் என்று வேண்டிக்கொண்டேன். ரசம் ரவுண்டு முடிந்தவுடன் மோர் சாதம் வர தொடங்கியது. எதிரில் சாப்பிடும் மாமி உள்ளங்கையை மட்டுமில்லாமல் முழங்கையையும் பயன்படுத்தி சாப்பிட்ட காட்சி காணக்கிடைக்காதது. பாயாசத்தை இலையில் இருந்து லாவகமாக சுழட்டி அடிக்க தெரியாத காரணத்தினால் கூச்சப்படாமல் கப்பில் கேட்டு வாங்கி குடித்தேன். அவா அவா சாப்பிட்டவுடன் பக்கத்தில் இருப்பவருக்கு காத்திருக்காமல் கப கபவென்று எழுந்து கை கழுவ சென்றார்கள். அதில் கூட ஒரு புதுமை. எச்சில் கை மற்றவர் மேல் படாமல் இருக்க, அதை கூப்பி சிறிது மேல்நோக்கி வைத்தவாறு கழுவுமிடம் செல்வது வழக்கம். இங்க அனைவரும் எச்சில் கையை கூப்பி தலைக்கு மேலே உயர்த்தி நடந்து செல்வதை பார்த்தபோது , ஜெமினி படத்தில் “எனக்கு தமிழ் பேச தெரியும்” என்று கையை உயர்த்தி நடந்துவரும் கிரண் நினைவுக்கு வந்தார்.

ஒருவழியாக வந்த வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு, நண்பனிடமும் அவன் குடும்பாத்தாரிடமும் விடை பெற்று கிளம்பினோம். எனக்கு இது ஒரு புதுமாதிரி அனுபவமாக இருந்தாலும், பைனாப்பிள் ரசங்களும், பன்னீர் பட்டர் மசாலாக்களும் ஆண்டுக்கொண்டிருக்கும் தற்போதய திருமண உணவு பந்திகள் மத்தியில் மடிசாப்பாடு எப்பவும் ஒரு படி மேல்!

Comments (12)

  1. Aug 8, 2016 at 5:24 AM
    மிக அருமையாக மடி சாப்பாட்டை பதிவு செய்திருக்கின்றாய். வாழ்க. தொடர்ந்து எழுதவும். உன் அருமையான கட்டுரைக்கு எத்தனை நாள் காத்திருந்தேன்.
  2. Aug 8, 2016 at 6:09 PM
    Kumar, “கூப்பி " modal thadavaya kelvi padaren …. Agaradhi venum pola unnoda Tamil purindhukolla …
  3. Aug 9, 2016 at 7:11 AM
    I have not experienced this but you explanation made me as if I have experienced this Great keep going
  4. Aug 9, 2016 at 3:17 PM
    ரொம்ப நன்றி பா. அவசியம் எழுதறேன் :)
  5. Aug 9, 2016 at 3:18 PM
    கை கூப்பி வணங்குவது kelvi pattatdhilla ?
  6. Aug 9, 2016 at 3:18 PM
    Thanks a lot maams :)
  7. Aug 9, 2016 at 4:44 PM
    Great post pradep.
  8. Aug 9, 2016 at 6:59 PM
    wonderful write up… made me laugh at times.. thanks and expecting more. :)
  9. Aug 9, 2016 at 7:35 PM
    Thanks Somu! Motivation kku nandri :)
  10. Oct 4, 2016 at 4:00 PM
    Deivamae _/\_ kelvi kuda patadhu ila. Pudhu anubavam !
  11. Oct 11, 2016 at 7:50 PM
    Nope… Meaning solli thola
  12. Oct 11, 2016 at 9:24 PM
    its just folding your palm in a kuzhi. like when we get theertham in koil :)

← Back to Blog